பராமரிப்பில்லாத குடிநீர் தொட்டி

Update: 2023-01-22 10:24 GMT

திருவாரூர்-மயிலாடுதுறை சாலையில் புது தெருவில் பொதுமக்கள் வசதிக்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இது முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக தொட்டியை சுற்றியுள்ள பகுதிகள் உடைந்த நிலையில் காணப்படுகிறது. இதன்காரணமாக அந்த பகுதியில் நீர் தேங்கி சாக்கடை போல் மாறிவிடுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்