குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2023-01-11 11:52 GMT

கரூர் மாவட்டம், வெள்ளியணையில் கிளை நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிளை நூலகத்திற்கு தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள் உள்பட பலர் வந்து இங்கு உள்ள புத்தகங்களை படித்து தங்களின் அறிவு திறனை வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த நூலகத்தின் அருகே ஏராளமான பிளாஸ்டிக் கவர்கள், குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்