குப்பை அகற்றப்படுமா?

Update: 2023-01-11 08:32 GMT


பாலப்பள்ளம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆலஞ்சி தபால்நிலையம் அருகே கிணறு உள்ளது. இந்த கிணற்றில் அந்த பகுதிைய சேர்ந்தவர்கள் சிலர் குப்பைகள் மற்றும் இறைச்சி, மீன் கழிவுகளை கொண்டி வந்தனர். தற்போது கிணறு முழுவதுமாக கழிவுகளால் நிரம்பி குப்பை தொட்டிபோல் காட்சி அளிக்கிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கழிவுகளை அகற்றி கிணற்றை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்