குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-07-18 17:42 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகே உள்ள கணபதிபுரம் கிராமத்தில் இருந்து கந்தர்வக்கோட்டை செல்லும் சாலை அருகே ஆதிதிராவிடர் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்புகளில் வசிக்கும் ஒரு சிலர் சாலையோரத்தில் பிளாஸ்டிக் கவர்களையும், கண்ணாடி பாட்டில்களையும், குப்பைகளையும் கொட்டி வருகின்றனர். இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்