குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2022-07-18 17:37 GMT

தஞ்சை-பட்டுக்கோட்டை செல்லும் சாலையோரங்களில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும், குப்பைகளில் இரைதேடி கால்நடைகள் அதிகளவில் வருகின்றன. இவை சாலையில் அங்கும், இங்கும் சுற்றித்திரிவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலையோரத்தில் கிடக்கும் குப்பைகளை அகற்றவும், குப்பைகள் கொட்டப்படாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்