குப்பைகள் எரிக்கப்படுவதால் அவதி

Update: 2022-07-18 13:47 GMT
மூங்கில்துறைப்பட்டு அருகே மங்கலம் கிராமத்தில் உள்ள சாத்தனூர் வலதுபுற கால்வாய் பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு, தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்பவர்களுக்கு கண் எரிச்சல், மூச்சுச் திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகிறது. இதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்