நடவடிக்கை எடுக்க வேண்டும்

Update: 2022-12-25 08:47 GMT


கொல்லங்கோடு நகராட்சிக்குட்பட்ட நித்திரவிளை சந்திப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் சாலையின் ஓரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்