கால்வாயில் தேங்கும் கழிவுகள்

Update: 2022-12-21 08:10 GMT

சிற்றாறு பட்டணம் கால்வாய் குலசேகரம் வழியாகப் பாய்கிறது. குலசேகரம் அரசமூடு சந்திப்பு அருகே பெருஞ்சாணி செல்லும் சாலையை இக்கால்வாய் கடக்கும் இடத்தில் 'சைப்பன்' அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் தலையணைகள், துணிகள் மிதந்து வருகின்றன. இதனால் இப்பகுதியில் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. எனவே அந்த பகுதியில் தேங்கி கிடக்கும் கழிவுகளை உடனுக்குடன் அகற்ற பொதுப்பணித்துறையின் நீராதாரப்பிரிவினர் முன்வர வேண்டும். மேலும் கால்வாயில் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் மழை நீர் ஓடைகள் வழியாக வந்து கலக்காதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரமேஷ் குமார்,

குலசேகரம்.

மேலும் செய்திகள்