குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2022-12-18 12:24 GMT

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியத்தில் காரப்பிடாகை பகுதி உள்ளது. இந்த பகுதியில் பள்ளியின் உள்புறம், கடைத்தெருவில் உள்ள குப்பை தொட்டியில் குப்பைகள் அதிகளவில் காணப்படுகிறது. அவை அப்புறப்படுத்த படாமல் உள்ளதால் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும் குப்பை தொட்டி மற்றும் அதன் அருகே மதுபாட்டில்கள் உடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்வோர் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை உடனே அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்