குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-12-14 09:51 GMT

கோவை காருண்யா நகரில் செரும்புபள்ளம் அருகே சிறுவாணி சாலையோரத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் உள்பட குப்பைகளை கொட்டி வைத்துள்ளனர். இவை முறையாக அகற்றப்படுவதும் இல்லை. இதனால் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. இ்ந்த குப்பைகளுடன் பிளாஸ்டிக் கழிவுகளையும் கால்நடைகள் தின்று வருகின்றன. இதனால் அவற்றின் உடல் நிலை பாதிக்கப்படுவதோடு, அந்த பகுதியில் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. எனவே குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்