சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் சில இடங்களில் குப்பைகள் தேங்கி காணப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தேங்கிய குப்பைகளில்பிளாஸ்டிக் கழிவுகளே அதிகமாக குவிந்துள்ளது. இதனால் சுற்றுச்சூழல் மாசடையும் நிலை உள்ளது. எனவே சாலையில் குப்பைகளை வீசுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.