விருதுநகர் பெத்தனாட்சி நகரில் சாலை ஓரத்தில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் இப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடுடன் காணப்படுகிறது. மேலும் தேங்கிய குப்பைகளில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே இப்பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும், குப்பைகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.