சுகாதார சீர்கேடு

Update: 2022-12-11 07:42 GMT

மேலசங்கரன்குழி ஊராட்சிக்கு உட்பட்ட பாம்பன்விளை பகுதியில் பஸ் நிறுத்தம் எதிரே சிலர் குப்பைகளை கொட்டி செல்கிறார்கள். இதனால் இந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து நிற்கும் பயணிகளும், அந்த வழியாக செல்லும் பொதுமக்களும் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே அந்த பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுத்து நிறுத்தியும், குப்பைகளை அப்புறப்படுத்தியும் சுகாதாரத்தை பேண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்