குப்பைகளை எரிப்பதால் அவதி

Update: 2022-12-07 18:03 GMT
சங்கராபுரம் தாலுகா பிரம்மகுண்டம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் அருகே வடபொன்பரப்பி பிரதான சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுகிறது. இதில் இருந்து வெளிவரும் புகையினால் அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டு வருவதால் மிகவும் சிரமப்படுகின்றனர். இதை தவிர்க்க குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரி்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்