தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2022-12-04 13:39 GMT

நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில் தோட்டத்தெரு உள்ளது. இந்த தெருவில் தூய்மை பணி நடந்த போது, செடி கொடிகளை தூய்மை பணியாளர்கள் அகற்றினர். ஆனால் அதனை அப்புறப்படுத்தாமல் அங்கே போட்டு சென்றனர். இதனால் மழைக்காலங்களில் செடி, கொடிகள் அழுகி அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதன்காரணமாக அந்த பகுதியை சேர்ந்த மக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து செடி, கொடிகளை அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்