குப்பை கிடங்கு இடமாற்றம் செய்யப்படுமா?

Update: 2022-11-30 12:11 GMT

மயிலாடுதுறை நகரில் காவிரி சட்ரோஸ் பகுதியில் 500-க்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள திடக்கழிவு மேலாண்மையில் நகரில் சேமிக்கப்படும் அனைத்து குப்பைகளையும் கொட்டி வருகின்றனர். குப்பைகள் அதிகமாகும் நிலையில் தீயிட்டு கொளுத்தும் நிலை உள்ளது. இதனால் அந்த பகுதியில் புகை மூட்டமாக காணப்படுவதோடு, மூச்சு திணறல் போன்றவை ஏற்படுகின்றன. மேலும் மழைக்காலங்களில் குப்பைகளில் இருந்து தண்ணீர் வழிந்தோடி அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு, நிலத்தடி நீர் மாசடையும் நிலை ஏற்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சீரமைக்கவேண்டும் அல்லது இதனை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும்

மேலும் செய்திகள்