கடலூர் புதுக்குப்பம் ஆயுதப்படை மைதானம் அருகில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. அதனை முறையாக துப்புரவு ஊழியர்கள் அள்ளிச்செல்லாததால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குப்பைகளை உடனுக்குடன் அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது அவசியம்.