குப்பைகள் அகற்றப்பட்டன

Update: 2022-11-23 13:27 GMT
தர்மபுரியில் உதவி கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் அருகருகே செயல்படுகின்றன. இந்த அலுவலகங்கள் மற்றும் அருகே உள்ள பள்ளிகளுக்கு செல்லும் சாலையின் ஓரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து இருந்தது. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. இந்த குப்பைகளை அகற்ற வேண்டும் மற்றும் குப்பைகள் போடப்படுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியானது. இந்த நிலையில் அங்கு கொட்டப்பட்டிருந்த குப்பைகள் அகற்றப்பட்டன. இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய தினத்தந்திக்கு அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்