நடவடிக்கை தேவை

Update: 2022-11-23 11:46 GMT

நாகர்கோவில் கோட்டார் பகுதியில் உள்ள ஆசாரி தெருவில் கழிவுநீர் ஓடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடையின் நடுவே மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், குப்பை தேங்கி நிற்பதால் கழிவுநீர் வடிந்தோட வழியில்லாமல் காணப்படுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே, கழிவுநீர் ஓடையில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பத்தை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மிர்சா அகமது, நாகர்கோவில்.

மேலும் செய்திகள்