குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2022-11-20 10:47 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த ஆலத்தூர் கிராமத்தில் வைரேனி குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையில் குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. இதன்காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும், குவிந்து கிடக்கும் குப்பைகளில் இரை தேடி கால்நடைகள்  அதிகளவில் வருகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்