தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2022-11-16 14:40 GMT
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் ஏராளமான குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிட்டது. இந்த செய்தியின் எதிரொலியாக புகழூர் நகராட்சி அதிகாரிகள் குவிந்து கிடந்த குப்பை அகற்றினர். மேலும், அந்த இடத்தில் குப்பைகள் கொட்டுபவர்கள் மீது எடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்