குப்பைகளுக்கு தீ வைப்பு

Update: 2022-07-16 18:54 GMT

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம்- கோட்டப்பாளையத்திற்கு இடையேயான மாராடி ஏரியையொட்டி சாலையோரங்களில் அதிக அளவில் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளன. இந்த குப்பைகளில் மர்மநபர்கள் தீ வைப்பதினால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதி புகை மண்டலம் போல் காட்சி அளிப்பதினால் முதியவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்