வடிகாலில் தேங்கியுள்ள குப்பைகள்

Update: 2022-11-06 12:20 GMT

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தோப்புதுறை மகாராஜபுரம் கீழ்பாதி பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஏரானமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள வடிகாலில் குப்பைகள் நிறைந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவுநீர் தெருக்களில் வழிந்தோடுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக செல்வோர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்துவருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வடிகாலை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்