மயிலாடுதுறை நகராட்சி வண்டிக்கார தெருவில் போதிய குப்பை தொட்டி இல்லை. இதனால் அந்தபகுதியை சேர்ந்த சிலர் குப்பைகளை திறந்த வெளியில் கொட்டுகின்றனர். இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும்.