குப்பைகளுக்கு தீ வைப்பு

Update: 2022-11-02 14:41 GMT
பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள கிரீன்சிட்டி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் சாலையோரம் கொட்டப்படுவதினால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் இவற்றை அகற்றாத காரணத்தினால் சமூக விரோதிகள் அவ்வப்போது இந்த குப்பைகளில் தீ வைத்துவிட்டு செல்கின்றனர். இதனால் இப்பகுதியில் புகை மண்டலம் ஏற்பட்டு காற்று மாசு ஏற்படுகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்