ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையோரம் பிளாஸ்டிக் குப்பைகள், ரப்பர் டயர்கள் முதலியவை அதிக அளவில் குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுற்றுச்சூழல் மாசு அடைய வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்குள்ள குப்பையை அகற்றி அதனை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.