புகைமூட்டத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு

Update: 2022-10-30 15:37 GMT


தர்மபுரி கடைவீதி வழியாக செல்லும் எஸ்.வி.சாலையில் அரசு மருத்துவக்கல்லூரி அருகே சேலம் சாலை இணைகிறது. இந்த சாலையில் பச்சியம்மன் கோவில் மயானம் அருகே சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதனால் புகைமூட்டம் ஏற்பட்டு அப்பகுதியில் காற்று மாசு அடைவதுடன் சுற்றுச்சூழல் பாதிப்படைகிறது. மேலும் அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள் மூச்சுதிணறலால் அவதியடைகின்றனர். எனவே இங்கு குப்பைகள் எரிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கார்த்திக், தர்மபுரி.

மேலும் செய்திகள்