கால்வாயில் குப்பைகள்

Update: 2022-10-30 12:46 GMT

மதுரை மாநகராட்சி மேட்டுத்தெரு பகுதியில் உள்ள என்.எஸ்.கே. வீதி ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள கால்வாயில் குப்பைகள் தேங்கியுள்ளது. இதனால் அதில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படும் முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேங்கிய குப்பைகளை அகற்றி கால்வாயை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்