பந்தலூர் பஸ் நிலையம் இரவு, பகலாக மாடுகளின் கொட்டகை போன்று காட்சி அளிக்கிறது. அவை பஸ் நிலையம் முழுவதும் சிறுநீர் கழித்து சாணமிட்டு மக்கள் நடமாட முடியாத வகையில் அசுத்தமாக்கி விடுகின்றன. மேலும் கடும் துர்நாற்றம் ஏற்படுகிறது. இது ஒருபுறமிருக்க மறுபுறம் தெருநாய்களின் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. இதுதவிர இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்தும் இடமாக மாற்றி வருகின்றனர். எனவே பஸ் நிலையத்தை பாதுகாத்து பராமரிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.