குப்பைமேடாகும் புதிய பஸ் நிலையம்

Update: 2022-10-26 13:13 GMT

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் சென்னை, திருச்சி விரைவு பஸ்கள் நிற்கும் பகுதிக்கு தெற்கு பகுதியில் பெரியார், அம்பேத்கர் புத்தக மைய்யத்தையொட்டி உள்ள பகுதி குப்பைகள் கொட்டும் இடமாக மாறி வருகிறது. மேலும் இப்பகுதியை சமூக விரோதிகளும், பயணிகளும் பொதுக்கழிப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பல்வேறு நோய்கள் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்