குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-10-19 14:27 GMT

கோவை மாநகராட்சி 38-வது வார்டு பொம்மணம்பாளையத்தில் மின் மயானம் உள்ளது. இங்கு இறந்தவர்களின் உடலை கொண்டு வந்து அடக்கம் செய்பவர்கள், குப்பை கழிவுகளை அங்குள்ள பொதுக்கழிப்பிடம் அருகில் சாலையோரம் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் அந்த இடமே குப்பை கழிவுகள் குவிந்து காட்சியளிக்கிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதோடு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே குப்பை கழிவுகளை அங்கு வீசிச்செல்வதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்