குப்பைகளோடு கிடக்கும் குப்பை தொட்டிகள்

Update: 2022-10-19 11:17 GMT

நாகை மாவட்டம், வேதாரண்யம் தாலுகா தேத்தாகுடி தெற்கு‌ கீழவெளி கன்னித்தோப்பில் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த குப்பை தொட்டிகள் உரிய பராமரிப்பின்றி உடைந்து காணப்படுகிறது. இதனால் குப்பைகளை கொட்டுபவர்கள் குப்பை தொட்டில் கொட்டாமல் தரையில் கொட்டிவிட்டு செல்கின்றனர். மேலும் அதிகளவில் குப்பைகள் தேங்கியுள்ளதால் அந்த குப்பைகளோடு குப்பை தொட்டியும் கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் குப்பைகளை குப்பை தொட்டியில் போட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்