குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2022-10-16 14:20 GMT

பசுபதி கோவில் ஊராட்சி 4-வது வார்டு, வசந்தம் நகர், நெசவாளர் காலனி ஆகிய பகுதிகளில் அதிகளவில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக அந்த வழியாக வரும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மூக்கை மூடியபடி செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மேலும், குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்