குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2022-10-16 13:49 GMT

மயிலாடுதுறை மெயின் ரோடு செங்கழுநீர் பிள்ளையார் கோவில் தெருவை அடுத்த பஸ் நிலையம் அருகே உள்ள ஆற்றில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், ஆற்றில் கிடக்கும் குப்பைகளால் நீர்வாழ் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகின்றன. அதுமட்டுமின்றி துர்நாற்றம் காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அந்த பகுதியை மூக்கை மூடிய படி கடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்