குளத்தில் கொட்டப்படும் கழிவுகள்

Update: 2022-10-05 17:21 GMT
திருவெண்ணெய்நல்லூர் அருகே இளந்துரை பஞ்சாயத்துக்கு உட்பட்ட மண்டகமேடு கிராமத்தில் குளம் உள்ளது. இந்த குளத்தை சில ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த குளத்தில் பிளாஸ்டிக் குப்பைகள், பாட்டில்கள் போன்ற தேவையற்ற கழிவுகளை கொட்டி குளத்தை வீணாக்கி விட்டனர். மேலும் இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துா்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குளத்தை துர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்