விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டியில் குப்பை சேகரிக்க வரும் வாகனம் குறிப்பிட்ட நேரத்தில் வராததால் அப்பகுதியில் குப்பைகள் தேங்கும் நிலை நிலவுகிறது. இதனால் சுகாதாரம் கெடுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் குப்பை சேகரிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.