தூர்வார வேண்டிய கால்வாய்

Update: 2022-10-05 11:25 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி பகுதியில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மேலும் அங்குள்ள சாக்கடை கால்வாய்களை தூர்வாராததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பை அள்ளி, சாக்கடை கால்வாய்களை தூர்வார வேண்டும்.

மேலும் செய்திகள்