தொற்று நோய்கள் பரவும் அபாயம்

Update: 2022-10-01 14:12 GMT

திருவாருர் மாவட்டம் சேகரை ஊராட்சியை சேர்ந்த பூதமங்கலம் பாரூக் நகரில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் குப்பைகளை கொட்டுவதற்கென குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் குப்பைகளை எடுத்துசெல்லாததால் குப்பை தொட்டி நிறைந்து காணப்படுகிறது. மேலும் இந்த குப்பை தொட்டி சேதமடைந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் குப்பை தொட்டியில் தண்ணீர் தேங்குவதால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்