சுகாதார சீர்கேடு

Update: 2022-09-28 12:51 GMT

நுள்ளிவிளை ஊராட்சி உட்பட்ட பேயன்குழி ஊரில் இரட்டைக்கரை கால்வாய் செல்கிறது. தற்போது இந்த கால்வாயில் சீரமைப்பு பணி நடைபெற்று வருவதால், தண்ணீர் வராமல் உள்ளதால் அப்பகுதியை சேர்ந்த சிலர் குப்பைகள், கழிவுகளை வீசிச் செல்கின்றனர். இதனால், அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாயில் குப்பைகள், கழிவுகளை அகற்றுவதுடன், குப்பைகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்