அகற்ற வேண்டிய குப்பைகள்

Update: 2022-09-27 17:04 GMT

நாமக்கல் அருகே பாப்பநாயக்கன்பட்டி ஊராட்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டு அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதிகளில் துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக செல்பவர்கள் சுகாதாரமற்ற காற்றை சுவாசிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி தேசிய நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் தேங்கும் குப்பைகளை அவ்வப்போது அகற்ற அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்