சாலைக்கு வந்த குப்பைகள்

Update: 2022-09-26 16:38 GMT

பாளையங்கோட்டை மகாராஜநகர் உழவர்சந்தை நுழைவுவாயில் அருகில் காய்கறி கழிவுகள், குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. அவற்றை கால்நடைகள் கிளறுவதால் சாலையிலும் குப்பைக்கூளமாக உள்ளது. தற்போது பெய்த மழையில் குப்பைகளில் தண்ணீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. எனவே, அங்கு போதிய குப்பைத்தொட்டிகளை வைத்து, குப்பைகளை தினமும் முறையாக அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்