இறைச்சி கழிவுகள் கொட்டுவதால் துர்நாற்றம்

Update: 2022-09-24 16:41 GMT
பழனி திருநகரில் இருந்து சண்முக நதி வரை பைபாஸ் சாலை உள்ளது. இந்த சாலையில் இடும்பன் கோவில் தெற்கு பகுதியில் மர்ம நபர்கள் இறைச்சி கழிவுகள், கட்டிட கழிவுகள் என ஏராளமான கழிவுகளை கொட்டி தீ வைத்து செல்கின்றனர். அதேபோல் சிறுவர் பூங்காவின் கிழக்கு பகுதியிலும் கொட்டி செல்கின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்