தொற்று நோய்கள் பரவும் அபாயம்

Update: 2022-09-23 13:46 GMT

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா காடுவெட்டி பகுதி சாலையோரத்தில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும், இறைச்சி கழிவுகளுக்காக நாய்கள் அதிகளவில் வருகின்றன. இவை போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிகின்றன. இவற்றால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்