சுகாதார சீர்கேடு

Update: 2022-09-23 13:32 GMT

மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் பகுதியில் ஆங்காங்கே குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இவை முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால் குப்பைகள் சாலையோரத்தில் குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மூக்கை மூடியபடி செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்