பெரம்பலூர்-எளம்பலூர் சாலை கீரின் சிட்டியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. அங்கு குப்பைகளை சேகரிக்க நகராட்சி தூய்மை காவலர்களும் வருவதில்லை. குப்பை தொட்டிகளும் வைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் தெரு ஓரங்களில் குப்பைகளை கொட்டி வைத்து வருகின்றனர். குவிந்து வரும் குப்பைகளை நாய்கள் கிளறி விடுகிறது. மேலும் காற்றில் பறந்து தெரு முழுவதும் குப்பைகளாக காணப்படுகிறது. எனவே நகராட்சி நிா்வாகம் குப்பைகளை சேகரிக்க தூய்மை காவலர்களையும், குப்பை தொட்டிகள் வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.