குவிந்து கிடக்கும் கழிவுகள்

Update: 2022-09-22 14:04 GMT
கரூர் மாவட்டம், நடையனூர் பகுதியில் தார் சாலையோரங்களில் பல்வேறு கழிவு பொருட்கள் மலைப்போல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்த வழியாக செல்லும் வாகனங்களில் சில நேரங்களில் சாலையோரம் செல்லும்போது விபத்தில் சிக்கி கொள்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்