குப்பைகளால் துர்நாற்றம்

Update: 2022-09-21 16:24 GMT

கூடலூர்-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில் அப்பாச்சி பண்ணை பஸ் நிறுத்தம் அருகே சாலையின் இருபுறங்களிலும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அங்கு மலைப்போல் குப்பைகள் குவிந்து கிடப்பதால் துர்நாற்றும் வீசுகிறது. இதனால் பொதுமக்களுக்கு தொற்று பரவும் அபாயம் உள்ளது. மேலும் குப்பைகளை தீவைத்து எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையோரம் குப்பைகள் கொட்டுவதை தடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்