குவிந்து கிடக்கும் குப்பைகள்

Update: 2022-09-21 12:41 GMT

நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய பகுதிக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். ரெயில் நிலையத்திற்கு முன்பு ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு எதிர்புறம் நெல்லை சந்திப்பில் இருந்து மீனாட்சிபுரம் பகுதிக்கு செல்லும் சாலையில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. சில சமயங்களில் இந்த குப்பைகளை தீ வைத்து எரிக்கிறார்கள். இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறிவிடுகிறது. எனவே, இந்த குப்பைகளை தினசரி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்