மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட திருமஞ்சன வீதியில் குப்பை மற்றும் கழிவுப்பொருட்களை கொட்டி வைத்துள்ளனர். இந்த பகுதியில் வீடுகள் உள்ளதால், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். குப்பைகள் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.
அப்துல் சலாம் - மயிலாடுதுறை