கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ராஜம்நகர் 2-வது குறுக்கு தெருவில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இது பற்றி மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை அந்த குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே இந்த குப்பைகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முன் வருமா?